கர்நாடக பஸ் பூந்தமல்லி அருகே தீப்பிடித்து எரிந்தது

கர்நாடக அரசு பேருந்து இன்று காலை சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. பூந்தமல்லி அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென்று பஸ்சின் பின்புறம் தீப்பிடித்தது. உடனடியாக பஸ்ஸை ஓரம்கட்டிய டிரைவர், பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டார். இதனால், பயணிகள் பத்திரமாக தப்பினர். பின்னர் தீ வேகமாக பரவியது. தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் விரைந்தனர். சாலையில் பஸ் எரிந்துகொண்டிருப்பதால் பூந்தமல்லி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.