அரசுப்பள்ளி ஆசிரியை நீட் தேர்வை எதிர்த்து ராஜினாமா

தமிழகத்தில் நீட் தேர்வு வந்ததன் விளைவாக பல்வேறு போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அதிலும் சமீபத்தில் மாணவி அனிதா உயிரிழந்தது தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் திண்டிவனம் வைரபுரம் அரசுப்பள்ளியில் சபரிமாலா என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். அவர் நீட் தேர்வுக்கு எதிராக தனது 7 வயது மகனுடன் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர். இன்று நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.