தீப்பெட்டி தொழிலாளி வீடு இடிந்து சேதம்

கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து, இவரது மனைவிமுத்தம்மாள்(58). மாரிமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.குழந்தைகள் இல்லாத காரணத்தினால் முத்தம்மாள் தனியாக வசித்து வருகிறார்.அருகில் உள்ள தீப்பெட்டி ஆலையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களாக கோவில்பட்டி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு முத்தமாள் வீடு ஈரப்பதமாக இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டின் மையப்பகுதி தீடீரென இடிந்து விழுந்து முற்றிலுமாக சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக முத்தம்மாள் வெளியே சென்று இருந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் முற்றிலுமாக சேதமடைந்தன.