பத்திரிக்கையாளர்களின் வலிமையான விமர்சனங்களுக்கு நன்றி – இயக்குனர் மிஷ்கின்

சவரக்கத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று காலை சென்னை வட பழனி சிகரம் அரங்கில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகரும் இயக்குனரும் சவரகத்தி படத் தயாரிப்பாளருமான மிஷ்கின் பத்திரிக்கையாளர்களின்  வலிமையான விமர்சனங்களுக்கு நன்றி என்றார்.

வண்மமான படமே இன்னும் நான் எடுப்பேன், ஆனாலும் அந்த வண்மத்துக்குள் ஒரு அன்பு இருக்கும் என்றார் மகிழ்ச்சியோடு, சமீபத்தில் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சவரக்கத்தி பட குழுவினர்களான இயக்குனர்கள் மிஷ்கின், ராம், நடிகை பூர்ணா, இயக்குனர் ஆதித்யா மற்றும் தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார், பி.ஆர்.வோ. ராஜ்குமார்  ஆகியோர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.