உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 3வது முறையாக முதலிடம்

உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழகம் 3-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான பரிசை டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதை பெறவுள்ளனர். உடல் உறுப்பு தானம் என்பது நோயுற்று உடலுறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவர், மற்றொருவருக்கு அந்த உடல் உறுப்பை தானமாக அளிப்பதாகும்.

இந்த உடல் உறுப்புகள் தானத்தால் பலர் உயிர் வாழ வழி வகுக்கும் என்பதால் உடல் உறுப்பு தானம் செய்வது மிகவும் முக்கியமானதாகும். தமிழகத்தில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு உள்ளதால் தமிழகத்தில் இதுவரை 1056 இறந்தவர்களிடம் இருந்து 5933 முக்கிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 3-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல் உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து நவம்பர் 27ஆம் தேதியான இன்று உடல் உறுப்பு தான தினமாக கொண்டாட படுகிறது.