சுந்தரி நீயும் சுந்தரி நானும்

விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஓர் புதிய குடும்பத்தொடர் தொடங்கவுள்ளது- ஆயுத எழுத்து. இது வரும் ஜூலை 22 முதல் திங்கள் முதல் சனி வரை, மதியம் 1 மணிக்கு  ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த கதையில் ரத்த பாந்தமான இரு குடும்பம் சில பிரச்சனைகள் காரணமாக பிரிந்து வாழ்கின்றனர் 

தமிழரசி கனிவான இதயம் கொண்ட சராசரி நடுத்தர வீட்டுப்பெண் , இவருடன் தாய், தாத்தா, மற்றும் இரண்டு தங்கைகள் இருக்கின்றனர். ஒரு அனாதை இல்லம் நடத்திவருகின்றனர். பணத்தால் மிகுந்தவராக இல்லாவிட்டாலும் மனதால் மிகுந்த குடும்பம். இவர்களின் தந்தை இறப்பை பற்றி அறியாதவர்கள். 

மற்றொரு பக்கம் வேல்முருகன் ஒரு பணக்கார வீட்டு பையன் அரசியலில் வெற்றி பெற நினைப்பவன் , தாய் தந்தையர் இல்லாததால் பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறான்.

பணத்தின் அருமை தெரியாமல் காசை அதிகமாக செலவு செய்பவன். பிரிந்த இந்த இரு குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு தங்கள் யார் என்பது தெரியாது முதல் சந்திப்பே கசப்பாகிறது. இவர்களுக்கிடையே காதல் மலருமா? இரு குடும்பங்கள் இணையுமா? 

இந்த தொடரில் வேல்முருகனாக வினோத் பாபு நடிக்கிறார். இவர் கலக்க போவது யாரு சீசன் 8 இறுதி போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் தமிழாக தேஜஸ்வினி அவர்கள் நடிக்கவுள்ளார். முன்னாள் தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகி லதா அவர்களும் நடிக்கவுள்ளார். மேலும் இந்த தொடரின் இயக்குனர் அப்துல் கபீஸ்  அவர்கள்

 பல திருப்பங்கள் கொண்ட இந்த தொடரை தினமும் மதியம் 1 மணிக்கு காணத்தவறாதீர்கள்