சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து எங்களது கருத்து அல்ல – தமிழிசை

Ilayaraaja 10000 film Tharai Thapattai

பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கிடைக்காது என சமீபத்தில் கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இந்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து தான், என தமிழக பா.ஜ தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

“சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து எங்களது கருத்து அல்ல. அவர் தனிப்பட்ட கருத்துக்கள் சொல்லி பழக்கப்பட்டவர். காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீருக்காக தமிழக பா.ஜ என்றுமே குரல் கொடுத்து வருகிறது. மத்திய பா.ஜ-வுக்கே எதிராக சுப்பிரமணியன் சுவாமி பேசி வரும் போது, அவரது கருத்துக்களை எப்படி எங்கள் கருத்துக்களாக எடுத்துக் கொள்ள முடியும்” என்றார் தமிழிசை. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்து பேசியபோது, “17 ஆண்டுகளாக காவிரி நடுவர் மன்றம் தீர விசாரித்து வழங்கிய தீர்ப்பு இது. இதன்படி நமக்கு காவிரி நீரில் உரிமை உள்ளது. சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்களுக்கு அவர் தான் விளக்கம் கொடுக்க வேண்டும்” என்றார்.