குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கியதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க கோரி சாலையில் படுத்து போராட்டம்

பல்லாவரம் நகராட்சி குரோம்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதற்கு நடவடிக்கைகள் எடுக்க பல்லாவரம் நகராட்சி மெத்தனமாக இருப்பதாகவும் உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் பல்லாவரம் நகராட்சி குடியிருப்போர் சங்க இணைப்பு மையம் சார்பில் அஸ்தினாபுரம் பகுதியில் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர் போலீசார் நகராட்சி மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.