முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள்-பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். சென்னையில் தலைமைச் செயலகத்துக்கு நேற்று காலை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்து பணிகளைக் கவனித்தார். பின்னர் சென்னை விமான நிலையத்தில் மாலை 6.20 மணி விமானம் மூலம் புறப்பட்டு மதுரை சென்றடைந்தார்.  அங்கிருந்து அவர் தனது சொந்த ஊரான பெரியகுளத்துக்குச் சென்றார். இன்று (14ஆம் தேதி) குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டாடுகிறார். தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இன்று  பிறந்த தினமும் ஆகும். இந்த நிலையில்  தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு  சட்டசபை எதிர்கட்சி தலைவரும் திமுகவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தொலைப்பேசி மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் முதல்-அமைச்சருக்கு பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.