ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் நாசா விண்கல நிலைதங்கள் போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம்

ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 8 ஆம் ஆண்டாக நாசா மற்றும் என் எஸ் எஸ் இணைந்து  நடத்திய விண்வெளி நிலைதங்கள் போட்டியில் ( 2021 ஆம் ஆண்டு ) உலக சாம்பியனாக  வெற்றி முழக்கமிட்டனர். 
 
இந்தபோட்டியில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளிருந்து மாணவர்கள் பங்கேற்றனர் . உலகளவில்                     160 ஆய்வு தொகுப்புகள் பரிசுக்காக தேர்ந்துடுக்கப்பட்டது. இதில் இந்தியாவிலிருந்து மட்டுமே  107  ஆய்வு தொகுப்புகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. அதிலும் 64 ஆய்வு தொகுப்புகள் அதாவது  50% மேற்பட்ட ஆய்வு தொகுப்புகள்  ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது .ஸ்ரீ சைதன்யா பள்ளியின்  மேலாளர் டாக்டர் .பி .எஸ் .ராவ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார் . 
 
உலகளவில் பரிசுக்காக தேர்வுபெற்ற  திட்டங்கள் – 160 . 
இந்தியளவில் பரிசுக்காக தேர்வுபெற்ற திட்டங்கள் – 107 / 160 ( 67 %). 
 
ஸ்ரீ சைதன்யா பள்ளியிலிருந்து தேர்வுபெற்ற திட்டங்கள் – 64 / 107  ( 60 % ). 
உலகளவில் தேர்ச்சியில் ஸ்ரீ சைதன்யாவின் பங்கு – 64 / 160 ( 40 % ) . 
ஸ்ரீ சைதன்யா பள்ளியின் தேர்ச்சிபெற்ற ஆய்வுத்தொகுப்புகளின் விவரங்கள் . 
 
உலகளவில் முதல் பரிசுகள் – 9 . 
உலகளவில்  இரண்டாம்பரிசுகள் – 9. 
உலகளவில் மூன்றாம் பரிசுகள் – 11 . 
மாண்புமிகு குறிப்புக்கள் – 35 . 
மொத்த பரிசு வென்ற திட்டங்கள் – 64 . 
 
இந்த 64  பரிசுவென்ற திட்டங்களை தயாரிப்பதில் மொத்தம் 758 மாணவர்கள்   பங்கேற்றதாக  டாக்டர்.பி.எஸ். ராவ் தெரிவித்துள்ளார். 
 
1 , 2 மற்றும் 3 ஆம் பரிசுகளில் எண்ணிக்கைளோ அல்லது பரிசு வென்ற திட்டங்களின்  எண்ணிக்கைளோ அல்லது திட்டங்களில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கைளோ, இந்தியாவின்  மற்றுமின்றி உலகிலே வேற எந்த பள்ளியும் ஸ்ரீ சைதன்யாவுடன்  போட்டியில் நெருக்கமாக இல்லையென்றும் அவர் கூறினார் . 
 
ஸ்ரீ சைதன்யா பள்ளிகளில் கல்வி இயக்குனர் திருமதி .சீமா கூறுகையில் , நாசா என் .எஸ் .எஸ்                   விண்வெளி நிலைதங்கள் போட்டியில் இதுபோன்ற மிகப்பெரிய வெற்றிக்கு முக்கியமான  காரணம் நடைமுறை அடிப்படையிலான கற்பித்தல் முறையே என்று கூறியுள்ளார். இந்த வெற்றியை  சாத்தியமாகிய பரிசுவென்ற மாணவர்கள் அனைவர்க்கும் திருமதி .சீமா வாழ்த்துக்களை
தெரிவித்துள்ளார் .