சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தினை உயர்த்த வலியுறுத்தி கோவில்பட்டியில் சமூக ஆர்வலர்கள் கோவிலில் சிறப்பு பூஜை

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி கூவாத்தூர், புதுச்சேரி, பெங்களுர் என்று சென்றுவிடுவதாகவும், இதனால் மக்கள் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், தற்போது உயர்த்தப்பட்டுள்ள 1லட்சத்து 5 ஆயிர ரூபாய்வுடன் கூடுதலாக 1 லட்சம் ரூபாய் ஊதியத்தினை உயர்த்தி கொடுத்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் சுற்றுலா செல்வதற்கு வசதியாக இருக்கும் என்று கூறி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சமூக ஆர்வலர்கள் சிலர் தாலூகா அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்ரீ ஜெய கணபதி ஆலயத்தில் சமூக ஆர்வலர்கள், காங்கிரஸ், தேமுதிக,பா.ம.க கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.