மு.க.ஸ்டாலினின் கடிதத்திற்கு டிவிட்டரில் பதில் – சுஷ்மா

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், கத்தார் நாட்டுடன் அரபு நாடுகள் உறவைத் துண்டித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே கத்தாரில் வசிக்கும் 6.5 லட்சம் இந்தியர்கள் இடையே அச்சம் அதிகரித்துள்ளது.

இதனால் அங்குள்ள தமிழர்கள் உள்பட அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பை வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்யவேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், கத்தாரில் உள்ள தமிழர்கள் உள்பட ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினின் கடிதத்திற்கு பதிலளித்து டிவிட்டரில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.