வடபழனி தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரண உதவி – முதல்வர் உத்தரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்டம், வடபழனி, தெற்கு பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஒரு அடுக்கு மாடி வீட்டில் கடந்த 8.5.2017 அன்று அதிகாலையில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில், பொன்னுசாமி மனைவி வேலம்மாள், சுப்புராஜ் மனைவி நாகலட்சுமி, ஜெயின் கிறிஸ்டோ, சாந்த குமார் மற்றும் ஹரிபிரகாஷ் ஆகிய ஐந்து நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அடைந்து வருத்தமடைந்தேன். மேற்கண்ட துயர சம்பவத்தில் காயமடைந்துள்ள ஐந்து நபர்களின் குடும்ப வறுமை நிலையை கருத்தில் கொண்டு, இந்நிகழ்வில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.