ரசிகர்களிடம் சிக்கிய ரகுல் ப்ரித் சிங்

திருப்பதியில் புதிதாக ஒரு ஜவுளிக்கடை திறக்கப்பட்டது. அதில் ஆந்திர மாநில மந்திரி அமர்நாத்ரெட்டி, திருப்பதி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுகுணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங் பங்கேற்றார். மகேஷ்பாபுவுடன் அவர் சேர்ந்து நடித்த ஸ்பைடர் படம் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுதவிர, அவர் ஏற்கனவே பல தெலுங்கு படங்ககளில் நடித்திருக்கிறார். ஆகவே, ரசிகர்களுக்கு அவரது முகம் நன்கு பரிச்சயம். 

இதனால் ராகுல் ப்ரீத் சிங்கைப் பார்ப்பதற்காகவும், அவருடன் சேர்ந்து செஃல்பி எடுப்பதற்காகவும், புதிய ஜவுளிக்கடையின் வாசலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், போலீசார் விரைந்து வந்து ஜவுளிக்கடையின் எதிரே வாசலில் திரண்டிருந்த ஏராளமான ரசிகர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், ரசிகர்கள் கலைந்து செல்லாமல் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தனர். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் நடிகை ரகுல் ப்ரித் சிங்கை சூழ்ந்து கொண்டனர். ஆத்திரம் அடைந்த போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.