கிளைமாக்ஸை நெருங்கும் ரஜினியின் 2.0 படப்பிடிப்பு

 

ரஜினி, ஏமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 2.0 படத்தை பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரமாண்டத்துக்குப் பெயர் போன ஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 2018இல் இப்படத்தை உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. 

இந்நிலையில், ஒரே ஒரு பாடலும், சில காட்சிகளின் ‘பேட்ச் ஒர்க்’ மட்டுமே 2.0 படத்தில் படமாக்கப்பட இருந்தது. அதில், பாடலுக்கான படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் நடைபெறும் இப்பாடல் படப்பிடிப்பில் ரஜினி மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இது முடிவடைந்தவுடன் ‘பேட்ச் ஒர்க்’ காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியதுள்ளது. அக்காட்சிகள் முழுவதுமே அக்டோபர் 21-க்குள் முடிக்கவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து துபாயில் அக்டோபர் 27ஆம் தேதி பிரம்மாண்டமாக இசை வெளியீடு நடத்த லைகா நிறுவனம் தயாராகி வருகிறது. இதற்காக படக்குழுவினரோடு பல்வேறு திரையுலக பிரபலங்களையும் துபாய்க்கு அழைத்துச் செல்ல இருக்கிறார்கள். அதற்கு முன்னதாக முதல் 2.0 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறவிருக்கிறது