நாட்டறம்பள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியர் படுகொலை

நாட்டறம்பள்ளி பேரூராட்சி தாயப்பர் தெருவை சேர்ந்த சதீஷ், ஏரிக்கோடியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை நண்பர்களோடு கண்டுகளித்துவிட்டு, இரவு 11 மணியளவில், ஏரிக்கரை சேவைச்சாலையில் தனியாக சென்றுகொண்டிருந்தபோது, பின் தொடர்ந்த மர்ம நபர்கள் அவரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பின்பு தங்களிடமிருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திலேயே சதீஷ் இறந்துள்ளார். 
 
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி,  உடற்கூராய்விற்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சதீஷை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.