கர்ப்பிணி பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid)இருக்கிறது.இது குழந்தையை பல விதங்களில் பாது காக்கிறது. அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது. இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு(amniotic membrane) உள்ளது.

இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பிறகு உடையும். ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது உடையலாம். அது .. Pre labour rupture of membrane எனப்படும்.அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று குழந்தைக்கு மட்டுமல்லாமல் தாய்க்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறைய திரவம் (நீர் வெளியேறுதல்) இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடிரென நீர் வெளியேறினால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கோடி கீழிறங்குவது உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக குழந்தை பிறப்பு ஏற்படுத்தப்படும்.  இது யாருக்கு ஏற்படும் என்று கூற முடியாது. ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.