பிரசாந்த் மருத்துவமனை சார்பில் 3 நாள் ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு’

பொது மக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த போக்குவரத்து காவல்துறையினருடன் சேர்ந்து பிரசாந்த் மருத்துவமனை சார்பில் 3 நாள் ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு’ நிகழ்ச்சி

• ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில்’ சுமார் 200 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளும் 5 கி.மீ. வாக்கத்தான் நடைபெற்றது

• வேளச்சேரி மற்றும் அதனைச் சுற்றி உள்ள போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலை சந்திப்புகளில் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பேனர்களை பிடித்து தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வு

பிரசாந்த் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 3 நாள் ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு’ நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதன் முக்கிய நோக்கம் வேளச்சேரி மற்றும் அதனைச் சுற்றி உள்ள மக்களிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். பாதுகாப்பான சூழலை வளர்ப்பதற்கும், விபத்துகளைத் தடுப்பதற்கும் பிரசாந்த் மருத்துவமனையால் மேற்கொள்ளப்பட்ட இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையிலிருந்து 5 கிமீ வாக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதை பிரசாந்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா மற்றும் இம்மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பாஸ்கரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த வாக்கத்தான் மூலம் மக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் சுகாதார வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் பிற சமூக உறுப்பினர்களை ஒன்றிணைத்து, பொறுப்பான முறையில் வாகனம் ஓட்டுவதை ஊக்குவிப்பதற்கும் கவனச்சிதறல்களைக் குறைப்பதற்குமான ஒரு முயற்சி என்று கூறியுள்ள இம்மருத்துவமனை இதன் மூலம் சாலை விபத்துகளை வெகுவாக குறைப்பதோடு, காயங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலைமைகளைத் தடுப்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும் என்றும் கூறியுள்ளது. அத்துடன் வேளச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள போக்குவரத்து நிறைந்த சாலை சந்திப்புகளில் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பேனர்களை தன்னார்வலர்கள் கையில் பிடித்து நின்று 3 நாள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறார்கள்.