யோகிபாபுவின் வேண்டுகோலாள் பாலபிஷேகம் ரத்து செய்யப்பட்டது


நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இன்று (22.3.2019) வெளியாகியிருக்கும் படம் ‘பட்டிபுலம்.’ யோகிபாபுவின் ரசிகர்கள் ‘பட்டிபுலம்” படம் வெளியாவதையொட்டி சென்னை கோயம்பேட்டிலுள்ள ரோகிணி தியேட்டர் வளாகத்தில் யோகிபாபுவின் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து தங்கள் பிரியத்தை வெளிப்படுத்தப் போவதாக தீர்மானித்திருந்தார்கள்.

ஆனால் யோகிபாபுவோ, ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்து, கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்துதான் அன்பைக்காட்ட வேண்டுமென்பதில்லை; உணவுப் பொருளை வீணாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தார்.

அவரது வேண்டுகோளையடுத்து கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வது ரத்து செய்யப்பட்டது.