ஒற்று ஒரு எழுத்தாளரின் கதை


ஒரு எழுத்தாளர் பார்வை திறன் அற்ற ஒரு பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண்ணிற்கு ஒரு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்பெண்ணின் பிரச்சனையை எழுத்தாளர் எவ்வாறு எதிர்கொண்டு முடிக்கிறார் என்பதை குடும்பபாங்காக திரில்லிங்குடன் சொல்லுவதே ஒற்று.

படத்தில் பாடல்கள் இல்லை,
காதலும் இல்லை, காதல் காட்சிகளும் இல்லை. மனதை வருடும் வித்தியாசமான கதை.

மகா மகா நுண்ணுணர்வு போன்ற படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்த மதிவாணன் இப்படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்திரா, மகாஶ்ரீ, சிவ அரசகுமார், உமா, மாண்டேஷ் ரமேஷ், ஜெயஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு –
ஆர். தினேஷ்

இசை – எஸ்.பி.வெங்கடேஷ்

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – மதிவாணன்

இதன் படப்பிடிப்பு ஊட்டி, குன்னூர் போன்ற மலை சார்ந்த இடங்களில் 35 நாட்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

இதன் நிறைவு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.