ஓ.பி.எஸ்.தரப்பு, துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடுக்கு ஆதரவு

அதிமுக புரட்சிதலைவி அம்மா அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு ஆதரவு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் வெங்கையா நாயுடு அவர்களுக்கு ஆதரவு தருமாறு, பாரதப் பிரதமர் நநேந்திர மோடி அவர்கள், கழகப் பொருளாளர், முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களை தொலைபேசி மூலம் கேட்டுக் கொண்டார். துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (புரட்சித் தலைவி அம்மா) ஆதரவு அளிக்குமென்று பாரதப் பிரதமர் அவர்களிடம் கழகப் பொருளாளர், முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.