மதுபானங்களின் விலை உயர்கிறது

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. 16ஆம் தேதி நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டு 20ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நான்காவது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், டாஸ்மாக் மதுபானங்களின் விலையை 5 சதவீதம் வரையில் உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் வீரமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். மாநில வருவாயை பெருக்கும் வகையில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுகிறது என அமைச்சர் வீரமணி குறிப்பிட்டார்.