வேட்பு மனுதாக்கல் செய்ய தொப்பி அணிந்து வந்த தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பாக டிடிவி.தினகரனும், திமுக சார்பாக மருதுகணேஷும், ஓபிஎஸ் அணி சார்பாக மதுசூதனும், தீபா பேரவை சார்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும், பாஜக சார்பாக கங்கை அமரனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகநாதனும், நாம் தமிழர் சார்பாக கலைக்கோட்டுதயமும் போட்டியிடுகின்றனர். 

இன்று ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மதுசூதனன், பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சசிகலா தரப்பு  வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி பிவீன் நாயரிடம் தனது வேட்பு மனுவை சரியாக 1.30 மணியளவில் தாக்கல் செய்தார். வேட்பு மனுத் தாக்கல் செய்த போது தனக்கு அறிவிக்கப்பட்ட சின்னமான தொப்பியை அணிந்து வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இன்று மாலை முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.