ஐடியா – வோடபோன் செல்போன் நிறுவனங்கள் இணைந்தன

இங்கிலாந்தை சேர்ந்த வோடபோன் நிறுவனமும், ஆதித்யா, பிர்லா குழுமத்தை சேர்ந்த ஐடியா செல்லுலர் நெட்வொர்க்கும் ஒன்றிணைந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று போடப்பட்டது. இந்த இரண்டு நிறுவனங்களும். இணைந்து உருவாகும் நிறுவனத்தின் 45-1 சதவீத பங்குகளை வோடபோன் வைத்திருக்கும். ஐடியா பிரமோட்டார்ஸ் 26 சதவீத பங்குகளை வைத்து இருக்கும் என்று ஒப்பந்தத்தில் முடிவாகியுள்ளது.

ஐடியா- வோடபோன் செல்போன் நெட்வொர்க்குகள் இணைந்ததால் இது தான் இந்தியாவின் மிகப் பெரிய செல்போன் நிறுவனமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த இணைப்பு நிறுவனத்துக்கு 40 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். வோடபோன் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ. 46 ஆயிரம் கோடியாகும். ஐடியா செல்லுலர் நிறுவனத்தின் வருடாந்திர வருமானம் ரூ. 36 ஆயிரம் கோடியிருக்கும். இந்த இரு நிறுவனங்கள் இணைப்பு மூலம் எதிர் காலத்தில் ரூ 67 ஆயிரம் கோடி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.