முக்காடு போட்டு ஓடிய நடிகை அதிதி மேனன் என்ற மிர்னா மேனன்

கடந்த பிப்ரவரி மாதம் பதிீனட்டாம் தேதி சென்னை கமிஷனர் அலுவலத்தில் என் மீது புகார் தெரிவிக்க டீசர்ட் ஜீன்ஸ் போட்டு முகத்தை மூடாமல் அனைத்து மீடியா நண்பர்களிடம் தனியாளாக சென்று மூச்சுவிடாமல் அனைத்து மீடியாவிற்கும் பேட்டியளித்த என் மனைவிக்கு சயானா என்ற ஆதிராசந்தோஷ் என்ற அதிதி மேனன் என்ற மிர்னா மேனன் மதுரை நீதிமன்றத்தில் சமரசதீர்வு மையத்தில் ஆஜராகிவிட்டு முக்காடு போட்டு முகத்தை மூடி ஓடிய காரணம் என்னவோ?

கேரளாவை சேர்ந்த அததிமேனன் சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு தனியாக வந்து பேட்டி கொடுத்த போது இல்லாத இந்த குடும்பம்…இப்போது எங்கிருந்து வந்ததோ?

பத்திரிக்கையாளர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசும் இவர் நாட்டியபள்ளி ஆசிரியர் சாரதா… இவர் அதிதிமேனன் என்ற மிர்னா மேனனின் சித்தி…

நானும் அதிதி மேனனும் வாழ்ந்த சாலிகிராம வீட்டில் பணிப்பெண்ணாக வேலைபார்த்த குமுளியை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணின் குழந்தையை அடித்து அரை நிர்வாணமாக்கி கொடுமைபடுத்தியதாக வழக்கு பதியப்பட்டு தேடபடும் குற்றவாளி யாக தலைமறைவில் இருந்து ஜாமீன் பெற்றவர் என்பது அவரின் தனிச்சிறப்பு..

– அபி சரவணன்.