‘வைரஸ் புத்திரன்’ – திரைப்பட பாடலாசிரியர் கருணாகரனின் கொரோனா கவிதை

கண்ணுக்குப் புலப்படாமல் உலகெங்கிலும் பெரும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றியொரு கவிதையை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கருணாகரன்.

சிம்பு நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், ‘வல்லவன்’ வெற்றித் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘காதல் வந்திருச்சு’ பாடலின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான கருணாகரன், அதைத் தொடர்ந்து அலெக்ஸ் பாண்டியன், சென்னை28 – 2, சக்க போடு போடு ராஜா, பேரன்பு, பார்ட்டி, நிசப்தம், மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார்.

தற்போதைய அசாதாரண சூழலை மையப்படுத்தி ஒரு கவிதையை படைத்திருக்கிறார். ஒரு இளம் கவிஞராக அவரது இந்த முயற்சி வரவேற்புக்கு உரியவொன்றாக அமைகிறது.