தென்னிந்திய நடிர் சங்க தேர்தல் பரபரப்புகளிடையே மயங்கி விழுந்த நலிந்த மூத்த கலைஞர்

சேலத்தை சேர்ந்த 80 வயது நடிகர் சுந்தரம் அவர்கள் நடிகர் சங்க தேர்தலில் ஒட்டளித்துவிட்டு வெளியே வந்த போது வெயில் காரணமாக மயங்கி விழுந்தார்..

கிட்டத்தட்ட முன்னூறு படங்களில் நடித்தவர் மூத்த நாடக கலைஞர் சேலம் சுந்தரம் அவர்கள்..

நடிகர் சங்க முறைகேடுகளை தவிர்க்க பதினெட்டு முறை வழக்கு தொடுத்து முறையாான தேர்தல் நடக்க நீதிமன்றம் மூலம் அடித்தளமிட்டவர்… குன்றத்தூரில் முதியோர் இல்லத்தில் வசித்துவரும் இவர் இன்றைய நடிகர் சங்க தேர்தலில் ஒட்டளிக்க ஆட்டோ மூலம் பள்ளிக்கு வந்தார்.. வெயில் காரணமாக ஒட்டளித்து விட்டு வரும் போதே தீடிரென மயக்கமடைந்தார்.. ஆனால் யாருக்கு தெரியவில்லை…

இந்நிலையில் ஓடடளித்துவிட்டுவந்த வளரும் நடிகர் அபிரசவணன் அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ மூலம் முதலுதவி அளித்துவிட்டு அவரது இருப்பிடம் பற்றி விசாரித்து குன்றத்தூரில் உள்ள அவர் வசிக்கும் முதியோர் இல்லத்தில் காரில் கொண்டு சேர்த்துவிட்டு வந்தார்…

முகநூல் மூலம் இதையறிந்த நடிகர் சங்க நிர்வாகிள் பலர் நடிகர் அபி சரவணன் அவர்களை பாராட்டினர்.