மஹிந்திரா & மஹிந்திரா-வின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்-ஆன ஆட்டோமோட்டிவ் மேனுபேக்சுரர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் தனது விற்பனை பிரிவின் புதிய கிளையை OMR-ரில் துவக்கியுள்ளது.

இந்த புதிய கிளையை மஹிந்திரா & மஹிந்திரா மண்டல விற்பனை பிரிவு மேலாளர் திரு.ஹரி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தெற்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் திரு.ஹிட்லர் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் ஆட்டோமோட்டிவ் மேனுபேக்சரர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக அதன் விற்பனை பிரிவு தலைமை அதிகாரி திரு.ராஜேஷ் அவர்களும் மற்றும் வாகனம் பராமரிப்பு மற்றும் சேவை பிரிவு பொது மேலாளர் திரு. வைத்தியநாதன் மற்றும் நிறுவனம் ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.