இந்திய கிரிக்கெட் அணியில் புதிய தமிழக வீரர்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாக பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. 

இதுகுறித்து பி.சி.சி.ஐ., தெரிவித்ததாவது, இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்குமார், தவான் இருவரும் சொந்த காரணங்களுக்காக விடுவிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் பந்துவீச்சாளர் புவனேஷ்குமாருக்கு பதிலாக, ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இடம்பெறுவார் என தெரிவித்துள்ளது.