நீட் தேர்வு, தமிழக அமைச்சர் புகார்

தமிழக சட்டபேரவையில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு நீட் தேர்வு குறித்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், நீட் தேர்வு பற்றிய தமிழக அரசின் மசோதாவை குடியரசுத் தலைவரிடம் மத்திய அரசு அனுப்பவில்லை. மாநில அரசு உரிமையிலிருந்த கல்வியை மத்திய அரசு எடுத்துக்கொண்டதற்காகவும், கிராமப்புற மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு கொண்டுவருவது குறித்து சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும்  அமைச்சர் கூறினார்.