நற்பணிகளில் தளபதி விஜய் மக்கள் இயக்கம்

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் பேனர்கள் வைப்பதை தவிர்த்து நலத்திட்ட உதவிகளை செய்தனர் .

கல்வியே வருங்கால தேசத்தின் வலிமை என்பதை உணர்ந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மேம்படுத்தும் பணி தயார் செய்யப்பட்டுள்ளது . அதன்படி முதற்கட்டமாக மாதம் ஒரு பள்ளி என்ற வீதத்தில் 10 மாதங்களில் 10 பள்ளிகளில் CCTV கேமரா பொருத்துதல் , கழிவறைகள் சீரமைத்தல் , நூலகம் அமைத்தல் , கணினிகள் வழங்குதல் , சுவர் ஓவியம் வரைதல் , தூய்மை செய்தல் , தண்ணீர் வசதி ஏற்படுத்துதல் போன்ற பல நற்பணிகள் செய்யப்பட்டு இதற்காக சுமார் 500000 ரூபாய் மதிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

வருகின்ற டிசம்பர் மாதம் 2019 இல் முதல்பணியாக நீலாங்கரை புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை மல்லியை CCTV கேமரா அமைத்து தரும் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது . காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க இளைஞரணி ரசிகர்கள் அனைவரும் இணைத்து இதற்கான செலவை ஏற்று பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள் .