ஏரி, குளங்களை தூர்வார திமுகவினர்க்கு தடை விதிக்க கூடாது என மு.க.ஸ்டாலின் மனுதாக்கல்

 

தமிழகத்தில் உள்ள ஏரி குளங்களை திமுகவினர் தூர்வார தடை விதிக்க கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சேலம் கட்சராயன் ஏரி விவகாரத்தை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் முறையீட்டுள்ளார். திமுகவின் இந்த முறையீட்டை மனுதாக்கல் செய்ய அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை வருகின்ற திங்கட்கிழமை விசாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.