அமைச்சர் ஜெயக்குமார் பட்டினம்பாக்கம் இல்லத்தில் பேட்டி

கமல் ட்விட்டரை பாட்டு பாடி கிண்டல் அடித்தார் அமைச்சர் ஜெயக்குமார். அவர் சொல்லி தான் செய்வது என்பது இல்லை. அம்மாவின் அரசில் நாங்களே எல்லா முன் எச்சரிக்கை நடவடிகைகளை நாங்களே எடுப்போம். கமல் ஒரு படத்தில் பயம் பயம் என்று சொல்வது போல ஸ்டாலின் தான் தேர்தலை கண்டு பயப்படுகிறார். தேர்தலை கண்டு நாங்கள் ஒருபோதும் பயப்படுவதில்லை.

தேர்தல் எப்பொழுது வந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். நில அபகரிப்புக்கு தந்தை என்றாலே திமுக மட்டும் தான். இந்த சுதந்திரமாக அனைவரும் நிலம் வாங்கலாம். அன்றைய திமுக ஆட்சியில் அவர்கள் துணை இருந்தால் மட்டுமே நிலம் வாங்க முடியும்.

ஆனால் எங்கள் ஆட்சியில் இந்த நிலை மாறி அனைவரும் சுதந்திரமாக நிலம் வங்குகிறாராகள். தலை எப்படி இருக்கிறாரோ அப்படி தான் வால் ஆடும். தினகரன் எப்படி அம்மாவின் ஆட்சியை கலைக்க வேண்டுமென நினைக்கிறாரோ அதை நாஞ்சில் சம்பத் வெளியிடுகிறார். ஸ்டாலினும், தினாகரனும் ஒரே படகில் சவாரி செய்பவர்கள்.