எம்.ஜீ.ஆரின் தொண்டர்கள் எம்.ஜீ.ஆரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுவார்கள் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ

கோவில்பட்டி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி மற்றும் ஏ.வி.மேல்நிலைபள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்வி மாவட்ட அலுவலர் சின்ராஜ் தலைமை தாங்கினார். இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு 645 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணிகளை வழங்கி பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

டிஜிட்டல் ப்ளாக்ஸ் பேனரில் உயிருடன் இருப்பவர்களி படங்கள் இடம்பெறக்கூடாது என்று நீதிமன்றம் கூறியவுள்ளதால் அனைவரும் அதனை பின்பற்ற வேண்டும், தமிழக அரசும், அதிமுகவும் நீதிமன்ற உத்தரவினை பின்பற்றும், தூத்துக்குடியில் நடைபெற்ற எம்.ஜீ.ஆர்.நூற்றாண்டு கால்கோள் விழாவில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சண்முகநாதன் சென்னையில் இருந்த காரணத்தினால் கலந்து கொள்ளவில்லை. மற்றபடி வேறு எதுவும் காரணம் இல்லை, எம்.ஜீ.ஆரின் தொண்டர்கள் அவரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுவர்கள். அடுத்த மாதம் 22ஆம் தேதி நடைபெறும் எம்.ஜீ.ஆரின் நூற்றாண்டு விழாவில் 100சதவீதம் எம்.ஜீ.ஆரின் தொண்டர்கள் கலந்து கொள்ளுவர்கள் என்றார்.