எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம்


அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் தலைமை கழகம் வெளியிட்டுள்ள 
செய்திக்குறிப்பில், பாரத ரத்னா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். 
அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த 
நாணயம் வெளியிட வேண்டும் என்று, நான் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த
 பொழுது, கடந்த 05.01.2017 அன்று மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் ஒரு கடிதம் அனுப்பிருந்தேன்.

எனது வேண்டுகோளை ஏற்று புரட்சித் தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழாவில், அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, மத்திய நிதி அமைச்சகம் கடந்த 17.7.2017 அன்று ஒப்புதல் கடிதம் எனக்கு அனுப்பியிருக்கிறது. தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் பாரத ரத்னா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.அவர்களின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட முடிவு செய்ததற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், அவரது தலைமையிலான மத்திய அரசுக்கும், தமிழக மக்களின் சார்பாகவும், விசுவாசமிக்க ஒன்றரைக் கோடித் தொண்டர்களின் சார்பாகவும், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புனிதப் பாதையில் நின்று எனது மனம் நிறைந்த மகிழ்ச்சியையும், கோடான கோடி நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.