மெட்ரோ ரயிலுக்கு ஆள் சேர்ப்பு செய்தி பொய், நிர்வாகம் விளக்கம்

சமூக வலைத்தளங்களில் சென்னை மெட்ரோவில் பணியாற்றுவதற்கு ஆட்கள் தேவை என்று பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்தச் செய்தி உண்மை இல்லை என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மெட்ரோவில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதென்றால் அது பற்றிய விளம்பரம் செய்தித்தாள்களில் மற்றும் சென்னை மெட்ரோ இணையத்தளத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.

எனவே மெட்ரோ நிர்வாகத்தில் பணியாற்ற விரும்புவோர் அதிகார்வபூர்வ இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்நிலையில், சமூக வலைத்தளமான பேஸ்புக், மற்றும் வாட்ஸ்அப்களில் பல்வேறு வகையான பொய்யான தகவல் பரவி வருகின்றது. அதில் மெட்ரோவில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாகப் பரப்பப்பட்டு வருகின்றது. இந்தச் செய்திகள் உண்மையில்லை. எனவே யாரும் இந்தப் பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். அப்படி யாராவது ஏமாந்தால் அதற்கு மெட்ரோ நிர்வாகம் பொறுப்பல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.