மணிரத்னத்தின் அடுத்த அதிரடி ‘எதிர்கட்சி’

அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டார் மணிரத்னம். டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டை இயக்குவதாக இருந்த அவர், தற்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டு சிங்கிள் ஹீரோ சப்ஜெட்டை இயக்குகிறார். அரசியல் களத்தில் இருதுருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர் – கலைஞர் கருணாநிதி வாழ்க்கையை ‘இருவர்’ படத்தில் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியது போல, தற்போது தமிழகத்தில் அனல் பறக்கும் சமீபத்திய அரசியல் நிலவரங்களை வைத்து திரைக்கதையாக்கியுள்ளார்.

அதற்கு ‘எதிர்கட்சி’ என டைட்டிலும் முடிவுசெய்துவிட்டார். ‘இந்த அரசியல் கதைக்கு விஜய் சேதுபதி கச்சிதமாக இருப்பார்’என்பதால் அவரிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. விஜய்சேதுபதி, தற்போது பன்னீர் செல்வம் இயக்கத்தில் `கருப்பன்’, சமந்தாவுடன் `அநீதிக்கதைகள்’, திரிஷாவுடன் `96′, கவுதம் கார்த்திக் உடன் இணைந்து `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் `சீதக்காதி’ படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.  இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் படத்தில் நடிக்க வந்திருக்கும் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். மணிரத்னம்- விஜய் சேதுபதி கூட்டணி அமைக்கப்போகும் தகவல் அறிந்து விஜய்சேதுபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வர உள்ளது!