அதர்ம யுத்தம், தர்மயுத்தம் – மைத்ரேயன்

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய வாய்ப்பு இல்லை. நாங்கள் சசிகலாவையும், தினகரனையும் நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

ஆனால் சசிகலாவோ 60 நாட்கள் கெடு கொடுத்திருப்பதாக தினகரன் அறிவிக்கிறார். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.  அவர்கள் நடத்துவது அதர்ம யுத்தம். நாங்கள் நடத்துவது தர்மயுத்தம். தினகரன் சந்தர்ப்பவாதத்துக்காக அரசியல் நடத்துகிறார்.தினகரனுக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறுவது நம்பும் படி இல்லை.

அவர்கள் எந்த நேரத்திலும் எங்கும் மாறுவார்கள். எடப்பாடி ஆட்சி நீடிக்குமா என்பதை இப்போதே சொல்ல முடியாது. ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் பல திருப்பங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.