டெல்லியில் மைத்ரேயன் தர்ணா போராட்டம்

டெல்லி தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் காரை தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்துக்குள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் மைத்ரேயன் தேர்தல் கமி‌ஷன் வாயிலில் சேர் போட்டு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அதிகாரிகள் வந்து அவரை சமாதானப்படுத்தினார்கள்.