குளிர் காலங்களில் இதய நோய் பாதிப்புகளை தடுக்கும் வழிமுறைகள்

கோயம்புத்தூர், டிசம்பர் 2021: கோயம்புத்தூரில் உள்ள சிறந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை- குமரன் மருத்துவ மையம்), அவர்களின் முன்மாதிரியான மருத்துவ சேவைகள் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.

இதன் ஒரு பகுதியாக, இருதயவியல் நிபுணர்களான டாக்டர்.ஏ.ஈஸ்வரன் எம்.டி., டி.என்.பி (இருதயவியல்) மற்றும் டாக்டர்.கே.கார்த்திக் எம்.டி., டி.என்.பி (இருதயவியல்) ஆகியோர் குளிர்காலத்தில் உண்டாகக்கூடிய இதய நோய் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து தெளிவான விளக்கத்தையும் விழிப்புணர்வையும் வழங்குகிறார்கள். 

குளிர்காலத்தில் இதய நோய் ஆபத்து 30% அதிகமாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து குமரன் மெடிக்கல் சென்டரின் இருதய நோய் நிபுணர்கள் டாக்டர்.ஏ.ஈஸ்வரன் மற்றும் டாக்டர்.கே.கார்த்திக் ஆகியோர் கூறுகையில் குளிர்காலத்தில் உடல் சூடாக இருக்க வேண்டும் என்பதால், தொடர்ந்து அதிகமான ரத்த ஓட்டம் உடலுக்கு தேவைப்படும். எனவே, இதயத்தின் வேலை கடினமானதாக மாறுகிறது. கடுமையான குளிர் இரத்த நாளங்கள் சுருங்க வழிவகுக்கிறது. எனவே, இது இதயத்திற்கு செல்லும் இரத்த நாளத்தையும் சுருங்கச் செய்கிறது. இந்த செயல்களால், இதயம் அதிக வேலை பளுவில் செயல்படுவதால்  குளிர்காலத்தில் இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் வியர்வை குறைவதால், உடலில் உப்பு மற்றும் நீரின் அளவு அதிகரிக்கிறது. இது உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கிறது. இதய நோய் ஏற்பட இதுவும் ஒரு முக்கிய காரணம். குளிர் காலத்தில், உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இந்த ஹார்மோன் மாற்றங்களினால், இரத்த உறைவு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக வாய்ப்புள்ளது.

குளிர்காலம் காரணமாக, பலர் அதிகாலையில் எழுந்திருக்க மாட்டார்கள், வழக்கமான உடற்பயிற்சிகளைத் தவிர்க்கவும் செய்கிறார்கள் அவர்களின் வழக்கமான உடல் செயல்பாடுகளைத் தவிர்ப்பது இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது. பொதுவாக, குளிர்காலம் பசியைத் தூண்டும். எனவே, பலர் அதிக கலோரி கொண்ட ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்கின்றனர். இதனால் இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக வாய்ப்பு ஏற்படுகிறது என்று கூறினர்.
குளிர்காலத்தில் ஏற்படும் அபாயம் இதய நோய் யாருக்கு அதிகம்?
வயதானவர்கள் – குறைந்த உடல் இடையை பெற்றவர்கள், கடுமையான குளிரைத் தாங்க முடியாது. எனவே, இது இதய நோய்க்கு வழிவகுக்கிறது.
ஏற்கனவே இதய பிரச்சனை உள்ளவர்கள் – குளிர் காலத்தில் இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம்.
புகைபிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்கள் – இதய நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
வழக்கமான உடற்பயிற்சிகளைத் தவிர்பவர்களுக்கு இதயநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

குளிர்காலத்தில் இதய பிரச்சனைகளை தவிர்ப்பது எப்படி?
கடும் குளிர் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவும். அப்படியே, நீங்கள் வெளியே செல்ல விரும்புகிறீர்கள் என்றால், வெப்ப ஆடைகளை அணிந்துகொள்ளவும், ஸ்வெட்டர்கள், கையுறைகள், காலுறைகள் மற்றும் காலணிகளால் உங்களை மூடிக்கொள்ளுங்கள்.
இந்த குளிர் காலத்தில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்கவும்.

குளிர்காலத்தில் இதய பரிசோதனை செய்வது அவசியம்.
குளிர்காலம் ஃப்ளூ காய்ச்சலை ஏற்படுத்துகிறது, இதனால் சுவாசபிரச்சனைகள் இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். எனவே, இந்த பருவத்தில் ஃப்ளூ தடுப்பூசியை  எடுத்துக்கொள்வது இதய நோய்களைத் தடுக்க உதவும்.
குளிர்காலத்தில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும். ஏனெனில் இது மிகவும் ஆபத்தானது மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
டாக்டர்.ஏ.ஈஸ்வரன் மற்றும் டாக்டர்.கே.கார்த்திக் ஆகியோர் குளிர்காலத்தில் இதய நோய் அபாயத்தை தவிர்க்க, கொடுக்கப்பட்ட பரிந்துரைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.
மேலும் விவரங்கள் மற்றும் தெளிவுகளுக்கு, 0422 – 2226222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது info@kumaranmedical.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.