சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுக்கை

கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட  சங்கரலிங்கபுரத்தில் சீரான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், குடிநீh வந்தாலும் வால்வுகள் இல்லாத காரணத்தினால் அடிபாம்பு வைத்து குடிநீர் எடுக்ககும் நிலை உள்ளதால், வால்வுகள் அமைக்க வேண்டும், சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் நகராட்சி அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கையை குறித்த மனுவினையும் அளித்தனர்.