ஓரிரு தினங்களில் அணி இணைப்பு பற்றி முடிவு தெரியும் – ஓபிஎஸ்


ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சி இரண்டாக பிரிந்தது. பின்னர் சசிகலா, தினகரன் ஆகியோர் சிறை சென்றதை தொடர்ந்து ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என மூன்றாக மாறியது. ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகளை இணைப்பது குறித்த பேச்சு வார்த்தை சசிகலா சிறை சென்றதில் இருந்து ஆரம்பமாகி தற்போது வரை இழுத்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இன்று அணி இணைப்பு குறித்த மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். 

செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய ஓபிஎஸ், “அணி இணைப்பு குறித்த பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் அணி இணைப்பு குறித்த முடிவு தெரிவிக்கப்படும். அதிமுகவினர் இடையே கருத்து வேறுபாடு இல்லை. தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் விருப்படி அணி இணைப்பு நடக்கும்” என தெரிவித்தார். அணி இணைப்பு குறித்து நீண்ட நாட்களாக அமைதி காத்து வந்த ஓபிஎஸ் தற்போது இவ்வாறு தெரிவித்து இருப்பதால் விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கலாம்.