கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பாராட்டுவிழா

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பாராட்டு விழா சௌபாக்யாமஹால் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு ரோட்டரிசங்கதலைவர் முத்துச்செல்வன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்டதலைவர் விநாயகாரமேஷ் மற்றும் ரத்தன்டா காரோஸ், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் வெங்டேஷ் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி சங்க உறுப்பினர் எஸ்.ராமமூர்த்தி தமிழ்நாடு வனத்துறை சார்பில் 2016 -17ஆம் ஆண்டிற்கான சிறந்த முறையில் மரப்பயிர் வளர்த்தோர்க்கான விருது வழங்கப்பட்டது.

அவரை பாராட்டும் முகமாக ரோட்டரி மாவட்ட வருங்கால ஆளுநர் எஸ்;.சேக்சலீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராமமூர்த்தியை பாராட்டி விருது வழங்கினார். இவ்விழாவில் ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, முன்னாள் துணை ஆளுநர் சீனிவாசன்,முன்னாள் தலைவர்கள தன்ராஜராஜா, நாராயணசாமி, பரமேஸ்வரன், வீராச்சாமி, லட்சுமணபெருமாள், சௌந்திரராஜன் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.