திருவள்ளுவரின் பிறந்தநாளை மாற்றியவர் கருணாநிதி

சென்னை மயிலாப்பூரில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வள்ளுவர் பிறந்தநாளானது வைகாசி அனுஷம் நட்சத்திரம் நாளில் தான் கொண்டாடப்பட்டு உள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களும் இன்றைய நாளிலேயே வள்ளுவன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

பல தமிழறிஞர்கள் இன்றைய நாளையே வள்ளுவரின் பிறந்தநாளான கொண்டாடி இருந்த சூழலில் திமுக தலைவர் கருணாநிதி வள்ளுவரின் பிறந்தநாளை மாற்றி விட்டவர். வைகாசி அனுஷம் நட்சத்திரத்தில் தான் வள்ளுவர் பிறந்த நாளாக கொண்டாடும் வகையில் தமிழக அரசாங்கம் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.