இமயமலை – யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகும்​​ கார்த்தி நடிக்கும் புதிய படம்

கார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை – யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது. மாபெரும் வெற்றி பெற்ற “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தை தொடர்ந்து கார்த்தி, ரகுல் பிரீத்சிங் வெற்றி ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள் .

மேலும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், RJ விக்னேஷ், அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார்.

இப்படம் மூலம் ரஜத் ரவிசங்கர் டைரக்டராக அறிமுகமாகிறார். கதை திரைக்கதை, வசனம் எழுதும் இவர், “எங்கேயும் எப்போதும்” இயக்குநர் சரவணன், பிரபல இந்தி இயக்குநர் அனுராக்காஷ்யப், இயக்குநர் R.கண்ணன் இவர்களுடன் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : R வேல்ராஜ்
எடிட்டிங் : ரூபன்
கலை : ஜெயஸ்ரீநாராயணன்
ஸ்டன்ட் : அன்பறிவ்
பாடல்கள் : கபிலன் , தாமரை , விவேக்
நிர்வாக தயாரிப்பு : K.V.துரை
அஸோஸியேட் தயாரிப்பு : ஜெய் ஜெகவீரன்.

பெயரிடப்படாத “ கார்த்தி 17’’ படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க – பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மண்குமார் தயாரிக்கிறார் .இவர், சூர்யா நடித்த சூப்பர் ஹிட்டான “சிங்கம்2” படத்தை தயாரித்தவர் தற்போது விரைவில் வெளியாக இருக்கும் திரிஷா நடிப்பில் R. மாதேஷ் இயக்கத்தில் “மோகினி” படத்தை தயாரித்து வருகிறார்.

“#கார்த்தி 17’’ படத்தின் படபிடிப்பு இம்மாதம் 8ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. இதை தொடர்ந்து யுரோப் நாட்டில் 15 நாட்களும் , ஹைதராபாத் , மும்பை , இமயமலை பகுதிகளிலும் உருவாகிறது.