காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுபினர்கள் கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுபினர்கள் கூட்டம் காஞ்சிபுரத்தில் கலைஞர் பவள விழா மாளிகையில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் நடைபெற்றது.இதில் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள சர்க்கரையின் விலை உயர்வை கண்டித்து நியாய விலைக்கடைகள் முன் ஆர்ப்பாட்டத்தையும், ரூ 1000 மற்றும் ரூ 500 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நாளான நவம்பர் 8 ஆம் தேதி கருப்புதினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டத்தையும் வெற்றிகரமாக நடத்திட தேவையான ஆலோசனைகள் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு நிவாரண பணிகளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொருலாளர் ஜி.சுகுமார், கழக மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்,ஆர்.டி.அரசு,எஸ்.புகழேந்தி மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்துக்கொண்டனர்.