ஜோஷ்வா விமர்சனம்

ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், வருண், கிருஷ்ணா, ராஹேய், திவ்ய தர்ஷினி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஜோஷ்வா இமைபோல் காக்க

நாயகன் வருண் பணத்திற்காக பெரும் முதலாளிகளை கொலை செய்யும் காண்ட்ராக்ட் கில்லர் வேலை செய்து வருகிறார். வருணும், நாயகி ராஹேவுக்கும் இடையே காதல் மலர்கிறது. இதனால் கருணை விட்டு பிரிந்து செல்கிறார் நாயகி ராஹே.

வருடங்கள் பலர் செல்ல கொலை செய்யும் வேலையை விட்டுவிட்டு வசதி படைத்த பணக்காரர்களுக்கு செக்யூரிட்டி கார்ட்’ஆக பணிபுரியும் வேலை பார்க்கிறார் வருண்.

இந்த நிலையில் பிரிந்து சென்று அமெரிக்காவில் வக்கீலாக இருக்கும் காதலி ராஹீயை கொலை செய்யத் துடிக்கிறது ஒரு மாஃபியா  கும்பல். 

அவரை பாதுகாக்குமாறு வருணுக்கு ஒப்பந்தம் வருகிறது. இதனை ஏற்றுக் கொண்ட வருண், காதலி ராஹேக்கு பாதுகாப்பு அளிக்கிறார். 

கடைசியில் வருண் ராஹேயை காப்பாற்றினாரா? இல்லையா?  ராஹேயை கொலை செய்ய வந்தவர்களை பழி வங்கினாரா? இல்லையா? வருணின் காதலை  ராஹே ஏற்றாரா? இல்லையா? என்பதே ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தின் மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்  

இயக்குனர் : கௌதம் வாசுதேவ் மேனன்
தயாரிப்பாளர் : ஐசரி கே.கணேஷ்
ஒளிப்பதிவு : எஸ்ஆர் கதிர் ஐஎஸ்சி
எடிட்டிங் : ஆண்டனி
இசை : கார்த்திக்
கலை இயக்குனர் : குமார் கங்கப்பன்
ஆடைகள் : உதாரா மேனன்
பாடல் வரிகள் : மதன் கார்க்கி, விவேக், விக்னேஷ் சிவன், சூப்பர் சுபு, கானா குணா
மக்கள் தொடர்பு : சுரேஷ்சந்திரா D’one