விமானப்பயணத்திற்கு தெலுங்கு தேச எம்.பிக்கு தடை

ஐதராபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய முற்பட்ட தெலுங்கு தேசம் எம்.பி.யான திவாகர் ரெட்டி காலதாமதமாக விமானநிலையத்திற்கு வந்ததால் அவரை விமானத்தில் பயணம் செய்ய ஊழியர்கள் அனுமதிக்கவில்லை, இதனால் கோபம்கொண்ட எம்.பி., ரகளையில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த கம்யூட்டரை தள்ளிவிட்டார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. பின்னர் அவர் அதே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இது குறித்து  இண்டிகோ விமானம் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் ஊழியரிடம் தகாத முறையிலும் நடந்துகொண்ட திவாகர் ரெட்டி எம்.பி.யை, இண்டிகோ விமானத்தில் அனுமதிக்கமாட்டோம்’ என்று தெரிவித்துள்ளது. இண்டிகோவைத் தொடர்ந்து ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், கோ-ஏர், விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களும், திவாகர் ரெட்டிக்கு தடை விதித்துள்ளன.