கண்பரிசோதனை செய்து இலவச கண் கண்ணாடிகள் வழங்கினார் ஜெய்சங்கரின் புதல்வன் விஜய் சங்கர்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு குருதட்சணை திட்டத்தின்படி, மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் புதல்வன் கண் மருத்துவர் விஜய் சங்கர் அவர்கள் கண்பரிசோதனை செய்து இலவச கண் கண்ணாடிகள் வழங்கினார்.

இன்று நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் தென்னிந்தியா நடிகர் சங்க துணை தலைவர் பொவண்ணன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சரவணன் மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்களான லலிதா குமாரி, மனோ பாலா, பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.