ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெ.தீபா போட்டி

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்து உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா இன்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பான விஷயத்தை விவாதிக்க இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து பத்திரிகையாளர்களை தீபா சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், “டிசம்பர் 21ஆம் தேதி நடக்கவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன்” என்று கூறியுள்ளார்.